ADMK Chief Secretary Edapadi Palanisamy [Image source : EPS]
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளோம். பிரச்சனை இன்றி மாநாட்டை நடத்தி அதிமுக கட்டுக்கோப்பானது என்பது நிரூபித்துள்ளோம்.
அதிமுக என்பது இனிமேல் ஒன்றுதான், எங்கள் தரப்பு தான் உண்மையான அதிமுக. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து சேலத்தில் திமுக மாநாட்டை நடத்துகிறது. 15 லட்சம் பேர் வந்த அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பை காவல்துறை தரவில்லை, ஆனால் அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெறும் திமுக மாநாட்டிற்கு பாதுகாப்பு எப்படி என்பதை பார்க்க உள்ளோம்.
பல இடங்களில் குடிநீருக்காக போராட்டம் நடைபெறுகிறது. காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தீர்வு காண முடியவில்லை; மேட்டூர் அணை நீர் குறைந்து வருவது குறித்து முதலமைச்சர் கவலைப்படவில்லை; தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…