அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது.
இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் வாதம் முன் வைத்தார். பொதுக்குழுவில் கட்சி விதிகளை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து 4 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் வைத்திலிங்கம் தரப்பில் கூறினர்.
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகளை தெரிவித்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…