அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயுத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்தும், கூட்டணி பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாகவும், அதிமுக 50வது ஆண்டு விழா பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல், கூட்டணி, சசிகலா ஆடியோ விவகாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…