Madras High Court. | IANS
அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991-96 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பரமசிவன். அப்போது, அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 1998-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் பரமசிவன் உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம்.? உண்மை நிலவரம் என்ன.?
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு சிறை தண்டனை உறுதியானது. சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு 2 ஆண்டிகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2000ல் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவன் 2015ல் காலமானார். இந்த நிலையில் மனைவிக்கு விதித்த தண்டனையை உறுதி செய்து, தண்டனையை அனுபவிக்க செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க தற்போது சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…