உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதிமுக அவைத் தலைவர் 80 வயதான மதுசூதனன் நேற்று உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர் தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மதுசூதனனின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று காலமான அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல், மூலக்கொத்தளம் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது. மறைந்த மதுசூதனனின் இறுதி ஊர்வலத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…