அதிமுக எம்.எல்.ஏ சி.வி.ராஜேந்திரனுக்கு கொரோனா நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாதாரணமாக வெளியில் சுற்றித் திரியக் கூடிய பொது மக்களை விட அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கு தான் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சட்டசபை தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் தான் சி.விராஜேந்திரன். பர்கூரில் உள்ள சிந்தகம்பள்ளியை சொந்த ஊராகக் கொண்டவர், கட்சி செயல்பாடுகளில் முன்னின்று பணியாற்றுபவராம். சில நாட்களுக்கு முன்பதாக கட்சி கூட்டங்களிலும் பூமி பூஜையிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பதாக இருமல் சளி மற்றும் காய்ச்சல் தொடர்ச்சியாக இருந்ததால் அவர் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…