பொங்கல் பரிசு ரூ.2500-க்கு அதிமுகவினர் டோக்கன் வழங்குவதாக கூறி நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரூ.2500 டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களை தரவும், அதிமுகவினர் வழங்கக்கூடாது என திமுக வலியுறுத்தல்.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை அதிமுகவினர் வழங்கும்போது முறைகேடு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பரிசுத்தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருப்பது தவறானவை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் டோக்கன் வழங்கினால் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்காத பெரும்பாலானோருக்கு பரிசுத்தொகை கிடைக்காது என திமுக தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோவை பகுதியில் ரூ.2500-க்கான பரிசு தொகையை அதிமுகவினர் வழங்குவதாக கூறி அதிமுக, திமுகவினர் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…