என் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு தமிழக அரசு தீர்வு வழங்க வேண்டும்.! தயார் அஜீஷா பேட்டி.!

Published by
மணிகண்டன்

கை அகற்றப்பட்ட எனது குழந்தைக்கு தமிழக அரசு தீர்வு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் அஜீஷா பேட்டியளித்துள்ளார்.  

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஷா தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு உடல் னால குறைவு காரணமாக, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்து தலையில் பிரச்னை இருப்பதாக கூறப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

அங்கு செவிலியர்கள் அளித்த சிகிச்சை தவறாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் கை அழுகியதன் காரணமாக எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், குழந்தை பிறக்கும் போதே குறை பிரசவத்தில் குறைபாடுகளோடு பிறந்துள்ளது. குழந்தை கை அகற்றப்பட்டது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அஜீஷா செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், எனது குழந்தைக்கு முதலில் 5 விரல் வரை சிவப்பாக இருக்கின்றது என கடந்த வியாழக்கிமை மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லிவிட்டேன். என்னிடம் செவிலியர் மட்டுமே பேசினார்கள் மருத்துவரை நேரில் சந்தித்து நான் எதுவும் கூறவில்லை. அப்போது குழந்தை நன்றாக இருந்தது. ஆனால், கை நன்றாக இல்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள் நிறைய குளறுபடி செய்துவிட்டார்கள்.

குழந்தை பிறகு 3 மாதத்திற்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதன் பிறகு மதுரைக்கு சென்றோம். அதன் பின்னர் தான் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். தற்போது மருத்துவர்களின் தவறை மறைக்க பாக்குறாங்க. தலையில் நீர் இருக்கிறது என்று தான் கொண்டு வந்தேன். என் புள்ளைக்கு ஏற்பட்ட விளைவுக்கு தமிழக அரசு முறையான தீர்வு வழங்க வேண்டும். என குழந்தையின் தாய் அஜீஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

18 minutes ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

1 hour ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

2 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

3 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

3 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

3 hours ago