#Alert:மக்களே கவனம்…இன்று முதல் 25 நாட்கள் ‘அக்னி நட்சத்திரம்’!

Published by
Edison

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்:

இந்நிலையில்,இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது.

10 மாவட்டங்களில் சதம்:

ஏற்கனவே,நேற்று 10 மாவட்டங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.அந்த வகையில்,அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும்,திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும்,மதுரையில் 103 டிகிரியும்,ஈரோடு,கரூர்,தஞ்சையில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.மேலும்,சேலத்தில் 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி என வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையி,இன்று முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது.

தமிழகத்தில் மழை:

எனினும்,தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,நாளை கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியே செல்ல வேண்டாம்:

இதனிடையே,வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்:”மே மாதத்தில் இயல்பை விட சற்று குறைவாகவே வெப்ப நிலை நிலவும்.அதே சமயம் வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வேகம் பொருத்து வெப்பநிலை மாறுபடும்.

தமிழகத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சூரியக் கதிர்கள் நேரடியாக தாக்கக் கூடும்.இந்த வேளையில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்”,என்று கூறினார்.

வெயிலை சமாளிக்க:

கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுவாக,கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான தர்பூசணி,வெள்ளரி போன்ற நீர்ச்சதுக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.குறிப்பாக,தினமும் தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.மேலும்,பிரஸ் ஜூஸ்(பழச்சாறு),இளநீர் போன்றவை பருக வேண்டும்.வெளியில் செல்லும்போது குடையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது.

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

1 hour ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

1 hour ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

2 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

3 hours ago