#Alert:மக்களே கவனம்…இன்று முதல் 25 நாட்கள் ‘அக்னி நட்சத்திரம்’!

Published by
Edison

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது.அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.மற்ற மாவட்டங்களில் சதத்தை நோக்கி வெப்பம் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பல இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்:

இந்நிலையில்,இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் கொளுத்த உள்ளது. ஏற்கனவே பல மாவட்டங்களில் 100 பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் வாட்டி வதைக்கிறது.

10 மாவட்டங்களில் சதம்:

ஏற்கனவே,நேற்று 10 மாவட்டங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.அந்த வகையில்,அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும்,திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும்,மதுரையில் 103 டிகிரியும்,ஈரோடு,கரூர்,தஞ்சையில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.மேலும்,சேலத்தில் 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி என வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையி,இன்று முதல் கத்தரி வெயில் தொடங்குகிறது.

தமிழகத்தில் மழை:

எனினும்,தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,நாளை கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளியே செல்ல வேண்டாம்:

இதனிடையே,வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்:”மே மாதத்தில் இயல்பை விட சற்று குறைவாகவே வெப்ப நிலை நிலவும்.அதே சமயம் வங்கக்கடல் பகுதியில் வீசும் காற்றின் வேகம் பொருத்து வெப்பநிலை மாறுபடும்.

தமிழகத்தில் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சூரியக் கதிர்கள் நேரடியாக தாக்கக் கூடும்.இந்த வேளையில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்”,என்று கூறினார்.

வெயிலை சமாளிக்க:

கோடை வெப்பத்தை சமாளிக்க பொதுவாக,கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான தர்பூசணி,வெள்ளரி போன்ற நீர்ச்சதுக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.குறிப்பாக,தினமும் தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.மேலும்,பிரஸ் ஜூஸ்(பழச்சாறு),இளநீர் போன்றவை பருக வேண்டும்.வெளியில் செல்லும்போது குடையுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்வது நல்லது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago