வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் அதிக குழப்பங்கள் நிலவி வருகின்றது.கட்சியில் உள்ள சில பிரமுகர்கள்அதிகாரப் போட்டியில் உள்ளனர்.அதே சமயத்தில் பதவிக்கும் ஆசைப்பட்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.பிரிந்து சென்ற பன்னீர்செல்வமும் பின்னர் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வராக பதவி வகித்து வருகின்றார்.இதனிடையே வருகின்ற 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் அந்த சமயத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் அதிகம் நிலவி வருகிறது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியுள்ளார் .அவர் கூறுகையில், ரஜினி அதிசயம் நடக்கும் என்கிறார். உண்மை தான் அதிசயம் நடக்கும். 234 தொகுதியிலும் அதிமுக கொடி பறக்கும். பாஜக விற்கு அதிமுக அடிமை என்கிறார்கள். ஆனால், மத்திய பாஜக அரசிடம் போராடி பல உரிமைகளை பெற்று தந்து உள்ளார் முதல்வர்.2021ல் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம் என்று பேசினார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…