இன்று முதல் அனைத்து பெண்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.பின்னர், தமிழகத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சிறப்பு ரயில்கள் இயங்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் புறநகர் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து அரசு ஊழியர்கள் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் தெற்கு ரயில்வே அறிவித்தது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைகாட்டி பயணிக்கலாம் எனவும் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் அனைத்து பெண்களும் வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடற்கரை – செங்கல்பட்டு- திருமால்பூர் மின்சார ரயில்களும் இன்று முதல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணிக்கும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரம் வேண்டுமானலும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…