ஏற்கனவே 6 லட்சம் கோடி கடன்., எப்படி முடியும் சொல்ல சொல்லுங்க பாக்கலாம் – சீமான்

Published by
பாலா கலியமூர்த்தி

இலவசம் என்ற பெயரில் வேற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருவதாக சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கடந்த 12ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியில் பாதி பெண்கள் பாதி ஆண்கள் என வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் தேர்தலில் முதல்முறையாக திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சீமான், இன்று அதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்கனவே சுமார் ரூ.6 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், இலவசம் என்ற பெயரில் வேற்று அறிக்கைகளை திராவிட கட்சிகள் வெளியிட்டு வருவதாக விமர்சனம் செய்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் வாசிங்மிஷின் இலவசம் என்று கூறியுள்ளார்கள். தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டை இருக்கிறது. ஒரு வாசிங்மிஷின் விலை ரூ.15,000 வரை வரும், ஆகையால், இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கொண்டு வருவார்கள், அதுக்கு ஒரு திட்டத்தை வகுத்து சொல்லுங்கள் என்று சீமான் கேள்வி எழுப்பி, ஒரு துறையை கூட விடாமல் அனைத்து துறையிலும் கடன் உள்ள நிலையில், எப்படி முடியும் என்று விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

36 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago