திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் வியக்கவைத்த பிரம்மாண்ட ட்ரோன் கண்காட்சி

Published by
Ramesh

திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் இடம்பெற்ற ட்ரோன் கண்காட்சி காண்போரை பெரிதும் கவர்ந்தது. தி.மு.க இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக இளைஞரணி தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையடுத்து மாநாடு நடைபெறும் திடலுக்கு இன்று வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு சுடரினை ஒப்படைத்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டு சுடரை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்த அமைச்சர் உதயநிதி!

இதனை தொடர்ந்து மாநாட்டு திடல் அருகில், 1500 ட்ரோன்களை கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன் ஷோ-வை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் திமுகவின் மூத்த தலைவர்கள் பார்வையிட்டனர். அதன்போது திமுகவின் வரலாறு, ஆட்சியின் சாதனைகள், இளைஞரணி தோற்றம் குறித்து காட்டப்பட்டது. மேலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, மு.க ஸ்டாலின் ஆகியோர்களின் உருவங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் ட்ரோன் கண்காட்சியில் காட்டப்பட்டதை தொண்டர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

5 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

5 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

5 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

7 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

7 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

7 hours ago