தமிழகத்தில் ஆம்பனால் ஆபத்து இல்லை – பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

ஆம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபுனர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தென்மேற்கு பருவ மழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், அதற்கேற்ப நிவாரணம் முகாம்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வரின் உத்தரவுப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்பன் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட மேற்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும்.

இதனால் மீனவர்கள் இன்று தெற்கு, மத்திய வங்காள விரிகுடாவுக்கு செல்ல வேண்டாம் என்றும் நாளை டக்கு வங்காள விரிகுடாவுக்கு செல்லவேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆம்பன் புயலால் தமிழகத்து ஆபத்து இல்லை என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து புயலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என கூறியுள்ளார். மக்களின் நலன்களுக்காக, இரவு, பகலாக தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பாதுகாப்பான மனநிலையில் உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

8 hours ago

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

9 hours ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

9 hours ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

10 hours ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

10 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

12 hours ago