bird Flu [file image]
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு பகுதியில் சில வாத்து பண்ணைகள் இருக்கிறது. அதில் வளர்ந்து வந்துகொண்டு இருந்த வாத்துகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தொடர்ச்சியாக உயிரிழந்துகொண்டே வந்தது. இதன் காரணமாக நடத்தப்பட்ட சோதனையில் உயிரிழந்த வாத்துகள் பறவை காய்ச்சல் பரவி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, இந்த பறவை காய்ச்சல் பரவலை உடனடியாக தடுக்கவேண்டும் என கால்நடை பராமரிப்பு துறை மிகவும் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எந்தெந்த இடங்களில் எல்லாம் வாத்துகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது என்பதனை கண்டுபிடித்து அந்த பண்ணைகளில் இருந்து கிட்டத்தட்ட 1 கி.மி. வரை எந்த இடங்களில் எல்லாம் வாத்துகள்,கோழிகள் வளர்க்கப்படுகிறதோ அதனை அழிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டு வருவது மட்டுமில்லாமல், அதனுடைய இறைச்சிகள் மற்றும் முட்டைகள் கூட விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பரவி வரும் இந்த பறவை காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் இருந்த நிலையில், சமீபத்தில், பொது சுகாதாரத் துறை ” தமிழகத்தில் பறவை காய்ச்சல் தொற்று இல்லை. இருந்தாலும் அதற்கான அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக” தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் ஆகி இருக்கிறது. குறிப்பாக, ஆனைகட்டி, வாளையாறு, முள்ளி, மேல்பாவி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…