மணலியில் இருந்து இரண்டு தினங்களில் முழுவதுமாக அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தப்படும் – மாநகர காவல் ஆணையர்.!

Published by
Ragi

சென்னை மணலி துறைமுகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை நேற்றைய தினம் ஹைதராபாத்திற்கு பாதுகாப்பாக அனுப்பட்டதாகவும் , இன்னும் இரண்டு தினங்களில் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் பெய்ரூட் துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு கடந்த 6 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட்டை ஒரே இடத்தில் இருப்பு வைத்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அதனையடுத்து இதே போன்று கடந்த 5 ஆண்டுகளாக சென்னை மணலி துறைமுகத்திலும் 740 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 740 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை மணலியில் உள்ள சரக்குப்பெட்டகத்தில் 37 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் 12 ஆயிரம் பேர் வசிப்பதால், அம்மோனியம் நைட்ரேட் கன்டெய்னர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் அதனை ஏலம் எடுத்துள்ளது. அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள் தலைமையில் நேற்றைய தினம் ஹைதராபாத் நிறுவனத்திற்கு அம்மோனியம் நைட்ரேட் நிறைந்த 37 கன்டெய்னர்களில் 10 கன்டெய்னர்களை லாரி மூலம் அனுப்பியுள்ளனர்.

மீதமுள்ள கன்டெய்னர்கள் விரைவில் அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து கூறிய மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், இன்னும் இரண்டு தினங்களில் அம்மோனியம் நைட்ரேட் முழுவதுமாக அப்புறப்படுத்தப்படும் என்றும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டே அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், எனவே அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

35 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

56 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

1 hour ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

4 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

4 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago