வாய் பேச முடியாத மாற்று திறனாளியான மூதாட்டிக்கு இரத்த தானம் செய்த, கண்பார்வையற்ற செம்பட்டூர் அரசு பள்ளியின் ஆசிரியர் சிவா.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மூதாட்டி சகுந்தலா. இவர் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவருக்கு அவசியமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தன்னார்வ அமைப்பினர் வாட்ஸ்அப் குழுவில் இந்த செய்தியை பதிவிட, கண்பார்வையற்ற செம்பட்டூர் அரசு பள்ளியின் ஆசிரியர் சிவா அந்த மூதாட்டிக்கு ரத்தம் அளிப்பதற்கு முன் வந்துள்ளார்.
இதனையடுத்து, சிவா அவரது நண்பர் வீரமாமுனிவர் உதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ரத்த தானம் செய்துள்ளார். சிவாவின் இந்த உதவும் மனதை பாராட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூபதி ரத்ததான சான்றிதழை வழங்கி பாராட்டி உள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…