12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்து நேற்று மத்திய அரசு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அகியோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயமாக நடைபெறும். தமிழக அரசின் நிலைப்பாடும் அது தான். தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிப்பதாககூறியுள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கைகள் குறித்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…