அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் , ஸ்டாலின் என மூன்று தலைமைகளுடன் பணியாற்றிய பேராசிரியரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் இன்று மறைந்து விட்டார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய்யுள்ளது. இவரை பற்றிய சிறப்பு தொகுப்பு…
பிறப்பு:
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19ம் தேதி, 1922 ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் ராமையா.
கல்வி:
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் (ஹானர்ஸ்) பட்டம் படித்தார்.பின் 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.
குடும்பம்:
இவர், 1945-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெற்றிச்செல்வி என்பவரை தனது வாழ்க்கை துணையாக ஏற்று திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு அன்புசெல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி வெற்றிச்செல்வி மறைவிற்கு பிறகு சாந்தகுமாரி என்பவரை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி எனும் மகளும் உள்ளனர்.
திராவிட வழியில் அன்பழகன்:
ஆன்பழகன் திராவிட சிந்தனைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால், தனது ராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். அன்பழகன், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
வகித்த பதவிகள்:
எழுத்தாளராக பேராசிரியர்:
இவரது மறைவு தி.மு.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…