அங்கொட லொக்கா வழக்கு.. சிவகாமசுந்தரியின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

Published by
murugan

அங்கொட லொக்கா வழக்கில் கைதான மதுரை வழக்கறிஞர்  ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இலங்கையின் நிழல் உலக தாதா என கூறப்படும் அங்கொட லொக்கா கடந்த 2018-ம் ஆண்டு முதல் கோவையில் உள்ள சேரன்மாநகர் பகுதியில் தங்கி உள்ளார். கடந்த மாதம் 3-ம் தேதி அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழந்தார்.

அங்கொட லொக்காவின் உடலை அவரது காதலி அம்மானி தான்ஷி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் மதுரையில் போலி ஆவணங்கள் வைத்து ஆதார் அட்டை தயாரித்து உடலை எரித்தனர்.

போலியான ஆவணங்கள் மூலம் உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால், இந்த வழக்கு பீளமேடு போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அங்கொட லொக்கா காதலி அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்மானி தான்ஜி சென்னை புழல் சிறையிலும், தியானேஸ்வரன் பெருந்துறை கிளை சிறையிலும் அடைக்கப்படுள்ளனர். கோவை சிறையில் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி அடைக்கப்பட்டார். இதையடுத்து,  ஜாமினில் விடுவிக்க கோரி வழக்கறிஞர் சிவகாமசுந்தரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீதான உத்தரவு வருகின்ற 24-ம் தேதி(அதாவது இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை வழக்கறிஞர் சிவகாமசுந்தரியின் ஜாமீன் மனுவை கோவைக்குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Published by
murugan

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

7 minutes ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

1 hour ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

1 hour ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

2 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

3 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

3 hours ago