அண்ணாமலை : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றியும், நாம் தமிழர் கட்சியை பாராட்டியும் பேசியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணாமலை பேசியதாவது ” இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை நான் தோல்வியாக பார்க்கவில்லை. வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும்” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” அரசியல் ரீதியாக எங்களுடைய இரண்டு கட்சிகளுக்கு எதிர் சித்தாந்தம் கொண்டிருந்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை பாராட்டுகிறேன். பணம் கொடுக்காமல் வாக்கு வாங்கியதற்காக நாம் தமிழர் கட்சியை நான் பாராட்டுகிறேன். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி நேர்மையாக நின்று இருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் அவர்கள் நேர்மையாக வாக்கு வாங்கிய காரணத்தால் நான் இந்த நேரத்தில் அவர்களை பாராட்டி தான் ஆகவேண்டும். சுயேட்சை சின்னத்தில் நின்று வாக்குகளை பெற்றுள்ளனர். நாம் தமிழருக்கு கிடைத்த வாக்குகள் திராவிட சித்தாந்தத்தை விட்டு மக்கள் வெளியே வருகிறார்கள் என்பதற்கு சாட்சி” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச…
வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக…
கோவா : ஜூலை 9 அன்று, கோவா அமைச்சரவை, ராட்வீலர் மற்றும் பிட்புல்ஸ் உள்ளிட்ட “கொடூரமான” நாய் இனங்களின் இறக்குமதி,…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…