தேர்தல் முடியட்டும்.. தமிழக உளவுத்துறை அதிகாரிகளுக்கு சிறை… அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

Annamalai: தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தனது செல்போனை ஒட்டுக்கேட்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகம் முழுவதும் அனல் பறக்க நடந்து வரும் நிலையில், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சுழலில் தனது செல்போனை தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒட்டுக்கேட்பதாக பகிரங்கமான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் அண்ணாமலை.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, தமிழக உளவுத்துறை அதிகாரிகள் எனது செல்போனை ஒட்டுக்கேட்கின்றனர். என் மனைவி, என் சகோதரி, உறவினர்கள் மற்றும் எனது நண்பர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்படுகிறது.

இதில் குறிப்பாக பிரெஸ் போன்களையும் ஒட்டுக்கேட்கின்றனர். நான் என்ன செய்கிறேன்என்பது உள்ளிட்டவைகளை உளவு பார்த்து அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தமிழக உளவுத்துறை ஐஜி தகவல் தெரிவிக்கிறார். சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த உளவு தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இப்படிலாம் செய்தா கோவை தேர்தல் முடிவை மாற்ற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை,  கோவையில் என்னை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்திருக்கிறது உளவுத்துறை என்றார். மேலும் கூறியதாவது,  தெலுங்கானாவில் சுமார் 2 லட்சம் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் மாநிலத்தின் உளவுத்துறை அதிகாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

தெலுங்கானாவில் உளவுத்துறை ஐஜியாக இருந்தவர் தற்போது அமெரிக்காவில் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலை தமிழ்நாட்டுக்கும் வரத்தான் போகிறது. எத்தனை நாள் ஆடுவார்கள். மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள். ஒவ்வொரு அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டும். இந்த ஆட்சி நிரந்தரமாக இருக்க போறதில்லை எனவும் தெரிவித்தார்.

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

18 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

36 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

59 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago