தமிழகத்தில் வரும் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் நியாய விலைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முழு ஊரடங்கால் வரும் 9ம் தேதி நியாய விலைக்கடைகள் செயல்படாது எனவும் டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதிக்கு முன்பாக பொருட்களை விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொது வினியோக திட்ட நியாய விலைக்கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பாடு என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள்/துணை ஆணையாளர் சூழல்நிலைகேற்ப வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் பரிசு பெற டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதிக்கு முன்பாக வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…