டிஎன்பிஎஸ்சி நியமனம்: பதில் தராவிட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை- உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

Published by
Surya

டிஎன்பிஎஸ்சி நியமனம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நியமனத்தில் தமிழ் வழியில் கற்றோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழ் பயின்றவர்களை தவிர்த்து, கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்றவர்களை மட்டும் கொண்டு குரூப் 1 நியமனத்தை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது, வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தமிழ்வழியில் தொலைதூர கல்வியில் படித்து ஒதுக்கீட்டின் மூலம் எத்தனை பேர் வேலைக்கு சேர்ந்தவர்கள்?, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தமிழ் வழி கல்வி கற்று இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்கவில்லை என்றால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்து, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Published by
Surya

Recent Posts

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

3 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

5 hours ago