35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள் பல இடங்களில் கேட்டு அர்ச்சனை செய்துவருகிறார்கள். ஆகம விதிகளின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் படி 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். அதில், 35 வயது கடந்தவர்கள் 75 பேர் உள்ளனர். இதனால், 35 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு முதலில் அர்ச்சகராக பணி நியமனம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்துதான் ஆக வேண்டும். அதுபோல் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என தெரிவித்தார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…