சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வீட்டு தனிமையில் இருக்க கூடிய நபர்களை கண்காணிக்க மருத்துவ படிப்பில் இறுதி ஆண்டு பயிலும் 300 மாணவர்களை மாநகராட்சி சார்பாக நியமனம் செய்துள்ளோம். முதற்கட்டமாக 135 மாணவர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மருத்துவர்கள் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களின் உடல்நிலை குறித்து அறியும் பணியை துவங்க உள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 30,000 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். தற்காலிகமாக பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மாதம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் தேவைப்பட்டால் மேலும் 10,000 படுக்கைகளை உருவாக்க தயாராக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…