தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.பாஸ்கரனை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மனித உரிமை ஆணைய தலைவராக பாஸ்கரன் செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளனர்.
தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த மீனாகுமாரியின் பதவிக்காலம் டிசம்பர் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது புதிய தலைவரை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2016 முதல் 2018 வரை பாஸ்கரன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…