தமிழுடனும் தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் என கமலஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பலரும் இவரது வாழ்க்கை பாதைகளை பற்றி பேசி வருகின்றனர். அதுபோல அவருக்கு பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் தமிழ்த் திரையுலகின் நடிகருமாகிய கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வள்ளுவருக்கு சிலை வடித்தும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தமிழையும் தமிழ் சான்றோரையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ் உடனும் தமிழர் நினைவுகளுடனும் கலந்தவர் கலைஞர் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…