தமிழக சட்டசபை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கூட்டம் நாளை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கொரோனா காரணமாக நாளை முதல் ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், மற்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் சபாநாயகர் அறிவித்து இருந்தார்.
அதன்படி, முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. கொரோனா பரிசோதனை முடிவில் முதல்வர் , துணை முதல்வர், மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் தனபால் என பல எம்எல்ஏக்களுக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.
இந்நிலையில், திருச்செங்கோடு தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி மற்றும் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் ஆகியோருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…