மாணவர்கள் கவனத்திற்கு! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மேலும் அவகாசம் நீட்டிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு செய்து உயர்கவித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணாக்கர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடத்தப்பட்டது.

இருப்பினும், சில அரசு கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் சில பாடப்பிரிவுகளில் காலியாக உள்ளன. எனவே, இது வரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in இணையதளத்தில் “TNGASA 2023-UG VACANCY” என்ற தொகுப்பில் காணலாம் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாளை இந்த 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி கொண்டு இருக்கிறது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் மிதமான மழையும்…

4 hours ago

பொய் பேசும் பழக்கம் மட்டும் மாறப் போவதில்லை! இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு பக்கம் திமுகவை விமர்சித்தும் மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அதற்கு…

4 hours ago

பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்த அதர்வா! உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்!

சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து…

5 hours ago

“ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க”…திமுக எம்எல்ஏ-வின் அநாகரிக பேச்சு!

தேனி : ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெண்கள் இலவச பேருந்து பயணத்தை "ஓசி" என்று குறிப்பிட்டு பேசியது…

5 hours ago

“ஜூலை 1 முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் இருக்கானும்”…ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

டெல்லி : இந்திய ரயில்வே துறை, ஜூலை 1, 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார்…

6 hours ago

ஹனிமூன் கொலை : “என்னோட தங்கைக்கு தூக்கு தண்டனை கொடுங்க”…அண்ணன் ஆதங்கம்!

மேகாலயா : இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச்…

7 hours ago