காவலர்கள் தாக்கி ஓட்டுநர் மரணம்:விடிய போராட்டம்..2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு!

Default Image

காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்திய நிலையில் தாக்குதல் நடத்திய காவல்ர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சாத்தன் குளம் வியாபாரிகளான தந்தை – மகன் உயிரிழந்த இச்சம்பவமே இன்னும் ஆறாத நிலையில் மீண்டும் ஒரு தாக்குதலை காவல்துறையினர் நடத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலையையும்,கண்டனத்தையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூரில் ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளர்கள் இருவர் தாக்கியதில் உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.ஐ. சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

மேலும் பதியப்பட்ட இந்த வழக்கில் அதாவது FIR-ல் சந்தேகத்தின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் தான்   காலர்கள் மீத் எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் உயிரிழந்த ஆட்டோ ஒட்டுநரின்  உறவினர்கள் விடியவிடிய போராட்டம் நடத்திய நிலையில்  இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்