தமிழக முன்னால் முதல்வர் செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை ‘மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’-ஆக அனுசரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், அந்த அறிவிப்பிற்கிணங்க, நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தை முன்னேற்றத்திற்க்கு இந்த ஆண்டிற்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது,
இந்த ஆண்டுக்கான இந்த விருது, கடலூர் மாவட்டம் மாலுமியர்பேட்டையை சேர்ந்த 9 வயது ச. பவதாரணி என்ற சிறுமிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அந்த சிறுமிக்கு மாநில அரசின் விருதின் 1 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது. இந்த சிறுமி போஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல், வாக்களிக்க மக்களை ஊக்குவித்தல், கண்தானம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு விழிப்புணர்வை மேற்க்கொண்டதால் இந்த சிறுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டுக்கது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…