தமிழ்நாடு

ஆயுதபூஜை விடுமுறை – சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 8000 பேருந்துகள் இயக்கம்..!

Published by
லீனா

இன்று மற்றும் நாளை ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.   நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் கடந்த 20-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,  கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

 இந்த விடுமுறை நாட்களில், பயணிகள் அதிகமாக பயணிப்பார்கள் என்பதால்,  அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்றும், கூடாது என்றும் தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இந்த நிலையில், ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் மூலம் 4.80 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டதாகவும், கடந்த 3 நாட்களில் 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் புதன்கிழமை வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 8000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த பேருந்துகள் இன்று முதல் புதன்கிழமை வரை இயக்கப்படும் என்றும்,  போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

24 seconds ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

26 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago