பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
முந்தய காலத்தில் தான் பெண் குழந்தைகள் என்றால் கள்ளிப்பால் வைத்துக்கொல்வதும், தூக்கி வீசுவதும் நடந்து வந்தது. தற்போதைய காலங்களில் பலருக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லை. அதிலும் பிறக்கக்கூடிய குழந்தை என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று வளர்க்க கூடிய மனப்பான்மைதான் அதிகரித்திருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் தற்போதும் பெண் குழந்தைகள் என்றால் அபச குணமாகவும், வேண்டா வெறுப்பாகவும் நினைக்கக்கூடிய பெற்றோர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சாலை ஓரத்தில் பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் குழந்தையின் அழுகுரல் கேட்டு, உடனடியாக சென்று பார்த்த பொழுது குழந்தை இருந்ததை கண்டுள்ளார். இதனை அடுத்து அக்குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் பிறந்து சில நிமிடங்களே ஆன இந்த பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற மனித மிருகம் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…