பிஇ மாணவர் சேர்க்கையில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தீவிரமாக பரவிய கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமலேயே உள்ளது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
எனினும்,பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கடந்த ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில்,பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.கணிதம்,இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
மேலும்,பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் முடியும் நிலையில் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி,10 மற்றும் 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் பாடத்தின் மதிப்பெண்,ரேண்டம் எண்,பிறந்த தேதி அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…