பிஇ மாணவர் சேர்க்கையில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தீவிரமாக பரவிய கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமலேயே உள்ளது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
எனினும்,பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கடந்த ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில்,பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.கணிதம்,இயற்பியல் பாடங்களுடன் வேதியியல் பாட மதிப்பெண் கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
மேலும்,பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் முடியும் நிலையில் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி,10 மற்றும் 12ஆம் வகுப்பு கணிதம், இயற்பியல் பாடத்தின் மதிப்பெண்,ரேண்டம் எண்,பிறந்த தேதி அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…