மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் பணியிடமாற்றம்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்துக்கு உட்பட்ட கனங்குளம் பகுதியில் வட்டாட்சியர் தமிழ் செல்வம் அவர்கள், சனிக்கிழமை இரவு மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேலுசாமி என்பவரின் கடைக்கு சென்று மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
வட்டாட்சியரின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், வட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்சியினரும், ஒன்றிணைந்த உணவு உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பாகவும் போராட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், அவர் ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…