“பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” – இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் !

Published by
Sulai

காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

அத்திவரத்தரை நாள்தோறும் தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசிக்க வரும்  பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாஸ் மூலம் சிறப்பு தரிசனமும் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

பாஸ் இருந்தால் மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்க படும் சூழலில் பாஸ் இல்லாமல் வரும் பக்தர்களிடம் காவல்துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்யும் போது பாஸ் இல்லாமல் வரும் சிலரை காவல் ஆய்வாளர் ஒருவர் அழைத்துச் செல்வதை கண்டார்.

 

உடனடியாக அவர் அருகில் சென்ற ஆட்சியர், ஆய்வாளரை பார்த்து “எந்த ஸ்டேஷன் நீ பித்தலாட்டமா பன்ற” “தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”  “நீ எல்லாம் போலீசா” “என்ன செக் பண்ணி அனுப்ச” “முக்கியமான விஐபி எல்லாம் நிக்காங்க நீ உன் இஷ்டத்துக்கு பண்ணுவாயா” என்று கடும் ஆவேசத்துடன் லெப்ட் ரைட் வாங்கினார். மேலும், ஐஜி நம்பர் எங்க இவன நாளைக்கே சஸ்பெண்ட் செய்யணும் என்றும் கூறி இருக்கிறார்.

 

பக்தர்கள் சூழ்ந்து இருக்கும் போது இவர் பேசி இருந்ததால், அங்கு இருந்தவர்கள் தங்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிற்து.

Published by
Sulai

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago