சர்வர் பிரச்சனை காரணமாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ள காரணத்தினால், ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 33,794 ரேஷன் கடைகள் உள்ளது. இந்தநிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அமல்படுத்திய தேதி முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தின் சர்வர் பிரச்சனை காரணமாக கைரேகை பதிவு செய்து, பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் புகார்கள் எழுந்தன.
இந்தநிலையில், இணையதள சர்வரை சரி செய்யும் வரையில் பயோமெட்ரிக் முறையை ஒத்திவைக்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தவகையில், இன்று காலை முதல் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் தங்களின் ஸ்மார்ட் கார்டுகளை கொண்டுசென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…