செப்டம்பருக்குள் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அவசியம்!

தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வாங்க இனி பயோமெட்ரிக் அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமானால் பயோமெட்ரிக் அவசியம் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர்-30ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு குடும்ப அட்டைகளில் உள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.