BJP – ADMK : பாஜவுடன் கூட்டணி கிடையாது.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து மிக முக்கிய அறிவிப்பை தெரிவித்தார். நேற்று வரை தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்த முடிவானது தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் கூறுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து அண்ணா பற்றி, விமர்சிப்ப்பது, தங்கள் தோழமை கட்சியை விமர்சித்து தன்னை முன்னிலைப்படுத்துவதை செய்து வருகிறார். இனி அவர் அப்படி பேசினால் அண்ணாமலையை பற்றி தாறுமாறாக அதிமுகவினர் விமர்சிப்பார்கள். அவர் ஒரு கருத்து கூறினால், இங்கு ஓராயிரம் கருத்துக்கள் வரும்.

ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை இப்படி செய்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருக்க தான் பாஜகவினர் விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையில் இருந்துகொண்டு எங்களையே அண்ணாமலை விமர்சிக்கிறார்.

அதிமுக இல்லாமல் பாஜக இங்கே (தமிழகத்தில்) கால் ஊன்ற முடியாது. எங்களை வைத்து தான் உங்களுக்கு (பாஜக) அடையாளம். எங்கள் தலைமையில் கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி செய்ய கூடாது. ஆதலால், இப்போதைக்கு அதிமுக – பாஜக கூட்டணி கிடையாது. தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்கிறோம்.

இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விமர்சனங்கள் வரும். அவர் எப்போதும் அவர் புகழ் பாடுவது மட்டுமே வேலையாக வைத்து கொண்டுள்ளார். இது என் கட்சியின் முடிவு. எனது தனிப்பட்ட கருத்து கிடையாது.

அண்ணாவை, பெரியாரை, எங்கள் தலைவரை விமர்சிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. இதனை டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களிடம் போய் சொல்லியும் அண்ணாமலை கேட்கவில்லை. இங்கு மாநில தலைமை முறையாக இல்லாத போது பாஜக தொண்டர்கள் உடன் ஒற்றுமையாக வேலை செய்ய முடியாது. பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகன் , தமிழசை தலைவராக இருந்த போது இல்லாத பிரச்னை இப்போது . அண்ணாமலை வந்தவுடன் வருகிறது. 4 பேர் வாழ்க என கோஷம் போட்டவுடன் அவருக்கு தலைக்கனம் உண்டாகிவிட்டது என அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .

Published by
மணிகண்டன்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

11 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

11 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

12 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

13 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

13 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

13 hours ago