BJP – ADMK : பாஜவுடன் கூட்டணி கிடையாது.! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து மிக முக்கிய அறிவிப்பை தெரிவித்தார். நேற்று வரை தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக – பாஜக கூட்டணி இல்லை என அறிவித்து விட்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்த முடிவானது தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் கூறுகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து அண்ணா பற்றி, விமர்சிப்ப்பது, தங்கள் தோழமை கட்சியை விமர்சித்து தன்னை முன்னிலைப்படுத்துவதை செய்து வருகிறார். இனி அவர் அப்படி பேசினால் அண்ணாமலையை பற்றி தாறுமாறாக அதிமுகவினர் விமர்சிப்பார்கள். அவர் ஒரு கருத்து கூறினால், இங்கு ஓராயிரம் கருத்துக்கள் வரும்.

ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு அண்ணாமலை இப்படி செய்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருக்க தான் பாஜகவினர் விரும்புகின்றனர். ஆனால் அண்ணாமலை விரும்பவில்லை. எங்கள் தலைமையில் இருந்துகொண்டு எங்களையே அண்ணாமலை விமர்சிக்கிறார்.

அதிமுக இல்லாமல் பாஜக இங்கே (தமிழகத்தில்) கால் ஊன்ற முடியாது. எங்களை வைத்து தான் உங்களுக்கு (பாஜக) அடையாளம். எங்கள் தலைமையில் கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி செய்ய கூடாது. ஆதலால், இப்போதைக்கு அதிமுக – பாஜக கூட்டணி கிடையாது. தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்கிறோம்.

இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விமர்சனங்கள் வரும். அவர் எப்போதும் அவர் புகழ் பாடுவது மட்டுமே வேலையாக வைத்து கொண்டுள்ளார். இது என் கட்சியின் முடிவு. எனது தனிப்பட்ட கருத்து கிடையாது.

அண்ணாவை, பெரியாரை, எங்கள் தலைவரை விமர்சிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. இதனை டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களிடம் போய் சொல்லியும் அண்ணாமலை கேட்கவில்லை. இங்கு மாநில தலைமை முறையாக இல்லாத போது பாஜக தொண்டர்கள் உடன் ஒற்றுமையாக வேலை செய்ய முடியாது. பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகன் , தமிழசை தலைவராக இருந்த போது இல்லாத பிரச்னை இப்போது . அண்ணாமலை வந்தவுடன் வருகிறது. 4 பேர் வாழ்க என கோஷம் போட்டவுடன் அவருக்கு தலைக்கனம் உண்டாகிவிட்டது என அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் .

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago