விஷச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

விஷச்சாராயம் வழக்கில்  கைதான பாஜக நிர்வாகி விஜயகுமாரை நீக்கம் செய்து பாஜக அறிவிப்பு.

செங்கல்பட்டு அருகே விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஷச்சாராயம் வழக்கில்  தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயகுமார் பிடிபட்டார். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் விஜகுமாரை கைது செய்து சித்தாமூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே விஷச்சாராய வழக்கில் அம்மாவாசை, ராஜேஷ், வேலு, நரேன், சந்துரு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில், விஷச்சாராயம் வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி விளம்பூர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். விஷச்சாராய வழக்கில் சிக்கிய விஜயகுமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விஜயகுமார் நீக்கப்படுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. விஜயகுமாரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக மாவட்ட தலைவர் மோகனராஜா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago