P CHIDAMBARAM [Image Source : ANI ]
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி என்றால் அது பாஜக தான் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், மத்திய அரசை விமர்சனம் செய்தால் உடனே காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். விமர்சனத்தை கூட சகித்துக்கொள்ள முடியாத அரசை நான் இப்போதுதான் பார்க்கிறேன். விமர்சனத்தை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியாக பாஜக உள்ளது.
பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில், இந்திய அரசை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை சிலர் பரப்புகிறார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதாவது, ராகுல்காந்தி வெளிநாட்டில் இந்தியாவை தரக்குறைவாக பேசியதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். வெளிநாடு சென்றால் மௌனமாக இருக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி என்றால் அது பாஜக தான் என அமைச்சர் ஜெய்சங்கர் கருத்துக்கு ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…