VCK Leader Thirumavalavan [Image source : Vikatan]
நாங்குனேரியில் நடைபெற்ற கோரசம்பவத்தில் தாக்கப்பட்ட சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா தேவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கல் இருவரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இருவரும் நலமுடன் உள்ளனர். கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாயின் அரவணைப்பில் இரு குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். முதல்வர் அவர்கள் இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு ஒரு வீட்டை ஆயத்தப்படுத்தி கொடுக்க வேண்டும். இருவரையும் பாதுகாப்பான முறையில் பயில வைக்க வேண்டும்.
சாதிப்பிரச்சனைகளை தடுக்க தனி உணவு பிரிவு தொடங்க வேண்டும். சாதியின் பெயரால் நெல்லை தூத்துக்குடி வட்டாரங்களில் இந்த கொடுமை தொடர்ந்து நடக்கிறது. மாணவனுக்கு அரசு சிறப்பான மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.
I.N.D.I.A கூட்டணியை பார்த்து பாஜக பயப்படுகிறது. இக்கூட்டணி உருவானது முதல், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழ்நாட்டில் எடுபடாது, எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…