கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்ட சபைக்குச் செல்கின்றனர்.
நாட்டின் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்தாலும் தமிழ்நாடு,கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில்,கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது மே 2 ஆம் தேதி நடைபெற்றது,அதன்படி அதிமுக கூட்டணி சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நாகர்கோவில், திருநெல்வேலி,கோவை தெற்கு மற்றும் மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால்,பாஜக எம்.எல்.ஏக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
இதற்கு முன்னர்,2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,திமுக கூட்டணி சார்பாக 21 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக காரைக்குடி, மயிலாப்பூர்,தளி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 இடங்களில் வெற்றி பெற்றது.ஆனால்,அதன் பின்னர் நடைபெற்ற 2006,2011 மற்றும் 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…