புதுச்சேரியை காப்பாற்ற பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மத்திய அரசுக்கு விரோதமாகவும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு விரோதமாகவும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநிலத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் அமைதிப் பேரணி போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்திய படி நேரு வீதி வழியாக பேரணியாக சென்று உள்ளனர். இந்த அமைதிப் பேரணியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. இந்த பேரணிக்கு பின்பதாக பேசிய முதல்வர் நாராயணசாமி அவர்கள் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தேர்தலில் ஓட ஓட விரட்ட வேண்டும் அப்படி செய்தால்தான் புதுச்சேரியை காப்பாற்ற முடியும் என கூறியுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…