பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்கும் பாமக கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையிலான குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகும் என தெரிகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வன்னியர் சமுகத்திற்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும், இதனை சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…