கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி.! ஏராளமானோர் கலந்துகொண்டனர்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனவர் கிராமங்களில் பாரதத் தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 29-ம் ஆண்டு படகுப் போட்டிகள் நடைபெற்றது.
  • இப்போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 29 நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனவர் கிராமங்களில் பாரதத் தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 29-ம் ஆண்டு படகுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 29 நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இப்படகுப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மீனவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் மீனவருக்கு 20 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், மூன்றாவது இடம் பிடிக்கும் மீனவருக்கு 15 ஆயிரம் ரூபாயும், நான்காவது இடம் பிடிக்கும் மீனவருக்கு 10 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், படகுப் போட்டியை காண சேதுபாவாசத்திர மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டுகளித்து சென்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago