பாய்லர் விபத்து.! உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை.!

பாய்லர் வெடித்து உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 2 வது அனல்மின் நிலையத்தில் அலகு 6-ல் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சார்புதீன் என்ற பணியாளர் ஏற்கனவே இறந்த நிலையில் இன்று சண்முகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிரிழந்ததால் இன்று என்.எல்.சி 2 வது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025