பாய்லர் வெடித்து உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 2 வது அனல்மின் நிலையத்தில் அலகு 6-ல் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சார்புதீன் என்ற பணியாளர் ஏற்கனவே இறந்த நிலையில் இன்று சண்முகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிரிழந்ததால் இன்று என்.எல்.சி 2 வது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…