+1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதியும், மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் மீதமுள்ள பிளஸ் 1 தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரையும், பிளஸ் +1 பொதுத் தேர்வு ஜூன் 2-ஆம் தேதியும், அதேபோல கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நடந்த தேர்வை எழுத முடியாமல் போன பிளஸ் +2 மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 6-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், கொரோனா ஒரு காலத்தில் பொது தேர்வு நடத்துவதால் மாணவர்களின் மனநலம் பாதிக்கும் என்றும் எனவே தேர்வை ஒத்திவைக்க பல தரப்பினர் கோரிவைத்தனர். இதைதொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். பின்னர் நேற்று தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்றும், இதைத்தொடர்ந்து +1 வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஜூன் 16-ம் தேதி நடத்தப்படும் என்றும் , மார்ச் 24-ம் தேதி தேர்வில் கலந்து கொள்ளாத +2 மாணவர்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…
கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…